search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொத்தனார் கொலை"

    • நள்ளிரவில் கொத்தானர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லடை ஊராட்சி பகுதியான கல்லடைையை சேர்ந்தவர மருதை. இவரது மகன் மோகன்ராஜ் (வயது 33). இவர் திருச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் கொத்தனார் வேலை செய்து வந்தார்.

    இந்தநிலையில் வழக்கம்போல நேற்று காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் தீர்ந்து விட்டது என செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். மேலும் பெட்ரோல் வாங்க அவரை நண்பர்கள் நள்ளிரவில் அழைத்துள்ளனர். அப்போது அவருடைய மனைவி இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்? நள்ளிரவு வெளியே போகக்கூடாது என கூறினார்.

    இருந்த போதிலும் மனைவி சொல்லை கேட்காமல், பெட்ரோல் வாங்க வெளியே தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை மோகன்ராஜ் திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் கைகாட்டி பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தகவலை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

    முன்விரோதத்தில் பெட்ரோல் வாங்க வேண்டும் என்று பொய் சொல்லி அழைத்து நண்பர்களே அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இருப்பினும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த மோகன்ராஜ்க்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். நள்ளிரவில் கொத்தானர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உத்தமபாளையம் அருகே தாய் மாமனை கல்லால் தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கொத்தனார் அடித்துக் கொலை

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே தாய் மாமனை குடிபோதையில் கல்லால் தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சி கோவிந்தன்பட்டியைச் சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 60). கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.

    இவரது தங்கை செல்வி. இவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். அதன் பிறகு செல்வியின் மகன் ஜெயக்குமார் (22) தனது மாமா மரியதாஸ் வீட்டிலேயே வளர்ந்து வந்தார்.

    சரி வர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தனது மாமாவிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். நேற்று இரவு அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. குடி போதையில் இருந்த ஜெயக்குமார் தனது மாமாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசினார்.

    மேலும் ஆத்திரமடைந்து பேவர் பிளாக் கல்லால் ஓங்கி தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மரியதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மரியதாஸ் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ஜெயக்குமாரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


    ×